கடவுளாகவும் வேண்டாம் மிருகமாகவும் வேண்டாம் ரசிகனாயிரு ஒவ்வொன்றோடும் ரசனையோடு பழகு

Monday, November 19, 2012

கடல் புறா- (சாண்டில்யன்)


-கடல் புறா- (சாண்டில்யன்)


சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் பொதுவாக எல்லாவற்றையுமே ரசிப்பவன் நான். அதிலும் மிகவும் பிடித்த நாவல் என்றால் கடல் புறாவையே கூறுவேன். கடல் புறா மூன்று பாகங்களாக வெளிவந்தது. பலருக்கு பிடித்த நாவலாகவும் இருக்கிறது. அப்படி வந்த மூன்று பாகங்களையும் தொடர்ச்சியாக படித்து முடித்தவர்களில் நானும் ஒருவன். (கல்கியின் பொன்னியின் செல்வனும் ஐந்து பாகங்களாக வெளிவந்து பொதுவாக எல்லாரையும் கவர்ந்தது - எனக்கும் பிடித்தது) இணையத்தில் இப்போது கடல் புறாவின் மின்புத்தக பிரதி ஒன்றை கண்டேன். விரும்பி வாசித்த கதையின் சுவாரசியம் மீண்டும் தொற்றிக்கொண்டது. அதனாலேயே இந்த இடுகை.

இளைய பல்லவன் என்கிற கருணாகர பல்லவன், காஞ்சனா தேவி, அநபாயன், மஞ்சளழகி, அகூதா என்று ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அமைத்த விதம் அருமை. 
போரின் திட்டங்களையும் தப்பிக்கும் உபாயங்களையும் கடல் கொள்ளை நுட்பங்களையும் ஒரு சேர கையாண்ட விதம் கதையோடு ஒன்றிக்க செய்து கட்டிப்போட கூடியது. அதிலும் கதை வாசித்து பல நாட்கள் ஆனா போதிலும் கடல் புற என்று கூறியவுடன் கடல் புறா எனும் கப்பலை வடிவமைத்து போர் புரியும் முறை திரைப்படம் போல் இன்றுவரை மனதில் ஓடுகிறது. ஸ்ரீ விஜயத்தை கைப்பற்றுவதற்காக போடும் ஒவ்வொரு திட்டங்களிலும் ஆசிரியரின் திறமையும் சேர்ந்து வெளிப்படுகிறது.

இது போன்ற கதைகளை திரைப்படமாக எடுத்தால் (நடிப்பதற்கு ஆட்கள் இல்லையே!!) நன்றாக இருக்கும். ஒரு ஆங்கில படத்துக்கு இணையாக - ஆங்கில படங்களை விட அருமையாக வடிவமைக்கப்பட்ட நாவல். காலம் பல சென்றாலும் கடல் புறாவின் சிறப்பு என்றும் மங்காது. திரைப்படமாக எடுத்து கதையின் தரத்தை குறைக்காமல் நாவலாகவே வைத்து ரசிப்பதே சிறப்பு !!!!!!!

-மகிந்தன்-

No comments:

Post a Comment