கடவுளாகவும் வேண்டாம் மிருகமாகவும் வேண்டாம் ரசிகனாயிரு ஒவ்வொன்றோடும் ரசனையோடு பழகு

Saturday, February 16, 2013

விஸ்வரூபம்




கமல் படம் என்றாலே எவ்வளவு சர்ச்சை கிளம்புகிறதோ அந்த அளவுக்கு படத்தில் சரக்கு இருக்கும் என்பது சர்வ நிச்சயம்...!!!
விஸ்வரூபதிலும் அதை பெரிதும் எதிர்பார்த்தேன். எதிர் பார்த்தது போலவே படம் மேலோட்டமாக பார்த்தால் சிறப்பாகவும் ஆழமாக பார்த்தால் அருமையாகவும்  இருந்தது.படத்தின் டிவிடிக்கள் ஏற்கனவே வந்து விட்டாலும் படத்தை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்று காத்திருந்தேன். 
இந்தியாவில் தமிழ்நாட்டில் படம் வெளியான பின்பும் கூட இங்கு வெளியாகவில்லை. இருந்தும் காத்திருந்தேன். ஒரு வழியாக படமும் ரிலீஸ் ஆனது. முதல் நாளே பார்ப்பதற்க்கு போனால் பாதி இருக்கைகள் கூட நிரம்பாத நிலை. எப்படியோ ஒரு வழியாக பார்த்தாயிற்று.
கமல் எப்போது வருவார் என்று 
எதிர்பார்த்து காத்திருந்தால் உன்னை காணாது நான் இன்று நானில்லையே என்று சற்றும் எதிர் பாராமல் திரையில் தோன்றினார் அந்த பாடலில் கொஞ்ச அழகான பொண்ணுங்க ஆடினாங்க இருந்தாலும் எல்லாரோட கண்ணும் கமல் மேலேதான் இருந்திருக்கும் என்பது நிதர்சனம். ஒவ்வொரு பிரேமிலும் மனுஷன் என்ன முகபாவனை என்ன நடிப்பு!! 



சரி இப்படி இருக்கும் கமல் எதோ ஒரு கட்டத்தில் அதிரடியாக மாற போகிறார் என்பது புதிதாக சினிமா பார்ப்பவனுக்கும் புரியும் என்றாலும் எப்படி மாறுகிறார் என்பதில் தான் கமல் ஜெயித்திருக்கிறார். எல்லோரையும் அடித்து விட்டு திரும்பி ஒரு பார்வை பார்ப்பார். ஹீரோயின் எப்படி பார்க்கிறாரோ அப்படியே எல்லாரும் பார்த்து கொண்டிருந்தனர். அதிலும் ஆக்சன் ரீப்ளேயாக ஆரம்பிக்குமே எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய் என்று அது படத்துக்காக பிரச்சனை பண்ணிய அத்தனை பேருக்குமே பதிலடியாக அமைந்திருக்கும். (படத்தில் அதற்காக அந்த காட்சி வைக்கபடவில்லை)


சரி கதை ஆரம்பிச்சாச்சு என்று இருந்தால் அடுத்த காட்சியில்  அல்கைதாவுக்கு பயிற்சி வழங்குவதற்காக கமல் வந்தார் என்று பிளாஷ்பேக் ஆரம்பமாகும். அதோடு கமல் அனைவரையும் கட்டி போட்டேவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையான ஜிகாத் போராளிக்கு கூட அந்த உடை தாடி அப்படி பொருந்துமா என்பது சந்தேகம்தான்.
இந்த படத்துக்கு எதற்கு இத்தனை தடை என்பது புரியவில்லை. படத்தில் முஸ்லிம்களை எதுவும் கேவலப்படுத்தவில்லையே!!  அமெரிக்க ராணுவம் பெண்கள் குழந்தைகளை கொல்லாது என்ற வசனம் அமெரிக்காவிடம் பாராட்டு பெற கமல் வைத்தார் என்பவர்கள் படத்தை இன்னும் நான்கு முறை புரிந்து பார்க்கவும்.ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வகையில் கமல் கவரத்தான் செய்கிறார். ஜிகாதிகளுக்கு பயிற்சியளிக்கும் காட்சி அப்பப்பா !!!


நானும் ஒரு நாத்திகன் என்ற வகையில் எனக்கு கமலின் சில வசனங்கள் மிகவும் பிடிக்கும். தசாவதாரத்தில் கடவுள் இல்லைன்னு எங்க சொன்னேன் இருந்தா நல்லா இருக்கும்ன்னு தானே சொல்றேன்னு சொல்லுற மாதிரி இதுலயும் சில வசனங்கள் என்னை கவர்ந்தது. எல்லாம் கடவுள் பார்த்துப்பார்ன்னு ஹீரோயின் சொல்லும் போது உடனே எந்த கடவுள் என்று கேட்பார். அதே போல ஹீரோயின் ஒரு இடத்தில் விசாரிக்கப்படும் போது ஒருவர் கேட்ப்பார் உங்க கடவுள் யார்ன்னு (ஆங்கிலத்தில்) அதற்கு ஹீரோயின் எங்க கடவுளுக்கு நான்கு கைகள் இருக்கும் என்பார் அதற்கு மற்றவர் அப்போ உங்க கடவுளை எப்படி சிலுவையில் அறைவீர்கள் என்பார்.. அதற்கு நாங்கள் அறைய மாட்டோம் கடலில் கரைத்து விடுவோம் என்பார். இது படத்தில் கமல் சொல்லவில்லை என்றாலும் கமல் கைவண்ணமே 

சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒருவரின் பதிவை வாசித்தேன் 'தேவர் மகன்'ல "போய் புள்ள குட்டிங்கள படிக்கவையுங்கடா"ன்னு சொன்னதையே இதுல இங்கிலிஷ்ல சொல்லியிருக்கார்ன்னு சொல்லியிருந்தார் அது என்னவோ சரிதான் !!! 'தேவர் மகன்'ல ஜாதி பிரச்சினைக்காக சொல்லியிருப்பார் இதுல மதம் அவ்ளோதான். ஹேராம், விருமாண்டி வரிசையில் விஸ்வரூபமும் என்னை மிகவும் கவர்ந்தது படத்தில் சில குறைகள் இருந்தாலும் நான் படத்தில் ஒவ்வொரு காட்சியும் ரசித்து பார்த்தேன். விஸ்வரூபம் 2 இல் தொடரும் என்று படத்தை முடித்திருப்பார். சீக்கிரத்தில் பார்ப்பதற்க்கு எல்லோரையும் போல நானும் ஆவலாகவே இருக்கிறேன். 

விஸ்வரூபம் - கமலின் விஸ்வரூபம்தான் 





No comments:

Post a Comment