கடவுளாகவும் வேண்டாம் மிருகமாகவும் வேண்டாம் ரசிகனாயிரு ஒவ்வொன்றோடும் ரசனையோடு பழகு

Sunday, July 21, 2013

மரியான் - கடல் ராசா




பொதுவாவே கடைசியா வந்த தனுஷ் படங்கள் தனுஷ் தவிர யார் நடிச்சாலும் நல்லா இருக்காதுன்னே சொல்லலாம் அதேதான் மரியான் !! தனுஷ் இல்லைன்னா படம் பத்து நிமிசத்துலையே மரிச்சு போயிருக்கும் கேட்டோ..!! எப்பிடியோ எனக்கு படம் ரொம்ப பிடிச்சுது. நான் எப்பிடி எதிர் பார்த்து போனேனோ அதே மாதிரி வந்ததாலயும் எனக்கு பிடிச்சிருக்கலாம் 
படத்துல மிகப்பெரிய பிளஸ்ன்னா அது தனுஷ்.!! தனுஷ்.!! தனுஷ் ரெண்டரை மணிநேரம் படத்தை உட்கார்ந்து பார்க்க முடிஞ்சதுக்கு முதல் காரணம் தனுஷ்தான் !!! நான் நினைக்கல அடுத்ததா போலீஸ்,மிலிட்டரின்னு நடிச்சா கூட இந்த பயபுள்ளைக்கு பொருத்தமா இருக்கும் போல எதை நடிச்சாலும் அப்பிடியே இருக்காப்ல. 
படத்துல மிகப்பெரிய பிளஸ்ன்னா அது தனுஷ்.!! தனுஷ்.!! தனுஷ் ரெண்டரை மணிநேரம் படத்தை உட்கார்ந்து பார்க்க முடிஞ்சதுக்கு முதல் காரணம் தனுஷ்தான் !!! நான் நினைக்கல அடுத்ததா போலீஸ்,மிலிட்டரின்னு நடிச்சா கூட இந்த பயபுள்ளைக்கு பொருத்தமா இருக்கும் போல எதை நடிச்சாலும் அப்பிடியே இருக்காப்ல. 
படத்துல மிகப்பெரிய பிளஸ்ன்னா அது தனுஷ்.!! தனுஷ்.!! தனுஷ் ரெண்டரை மணிநேரம் படத்தை உட்கார்ந்து பார்க்க முடிஞ்சதுக்கு முதல் காரணம் தனுஷ்தான் !!! நான் நினைக்கல அடுத்ததா போலீஸ்,மிலிட்டரின்னு நடிச்சா கூட இந்த பயபுள்ளைக்கு பொருத்தமா இருக்கும் போல எதை நடிச்சாலும் அப்பிடியே இருக்காப்ல. படத்துல மிகப்பெரிய பிளஸ்ன்னா அது தனுஷ்.!! தனுஷ்.!! தனுஷ் ரெண்டரை மணிநேரம் படத்தை உட்கார்ந்து பார்க்க முடிஞ்சதுக்கு முதல் காரணம் தனுஷ்தான் !!! நான் நினைக்கல அடுத்ததா போலீஸ்,மிலிட்டரின்னு நடிச்சா கூட இந்த பயபுள்ளைக்கு பொருத்தமா இருக்கும் போல எதை நடிச்சாலும் அப்பிடியே இருக்காப்ல.  இப்போ இந்த 'ஜெனரேஷன்'ல இருக்குற 'ஹீரோஸ்'ல 'ரியலான ரொமாண்டிக்' நடிப்புக்கு தனுஷை அடிச்சுக்க யாருமே இல்லைன்னுதான் சொல்வேன். அடுத்ததா படம் முடிஞ்சு வெளில வர்றப்ப மனசுல நிக்குறது மரியானுக்கு அடுத்து பனிமலர் தான். பார்வதி மேனன். 'பூ' ல பார்த்த பார்வதியா இதுன்னு நம்ப முடியல அவ்வ்வ்ளோ அழகு !! நடிப்பை சொல்ல வேணாம் 'பூ'லயே பார்த்தாச்சு. வர்ற எல்லா சீன்லயும் பின்னியிருக்கு இந்த புள்ள. தனுஷுக்கு அடுத்ததா இந்த படத்தை தாங்கி வச்சிருந்தது பார்வதின்னு தான் சொல்லணும் !!







இவங்க ரெண்டு பெரும் நடிப்புல பின்னியிருக்கும் போது அதை அவ்ளோ அழகா படமாக்கின விதம்தான் ரொம்ப அழகு. ஒளிப்பதிவு "Marc Koninckx"ன்னு ஒருத்தர் பண்ணியிருக்காப்ல.நெட்ல வந்து முதல்ல அதைத்தான் பார்த்தேன் மேல்கடல், ஆழ்கடல், பாலைவனம்ன்னு எல்லாமே அழகா இருக்கு. படம் அழகா இருந்ததுக்கு முதல் முக்கிய காரணமே ஒளிப்பதிவுதான்..!!
மேல் அடுத்ததா நம்ம ஏ.ஆர்.ரஹ்மான். "கடல்" மாதிரி இல்லாம இந்த படத்துக்கு பேக் ரவுண்ட் மியூசிக்கா இருந்தாலும் சரி பாடல்களா இருந்தாலும் சரி பின்னியிருக்காப்ல. ஒவ்வொரு பாடலும் ஆடியோல கேட்டதை விட ஸ்க்ரீன்ல வரும்போது அவ்ளோ அழகு.
படத்துல மைனஸ்ன்னு எனக்கு பட்டது ஒண்ணுதான் கடைசில வர்ற ஒரு 30 நிமிஷம். கடைசி 30 நிமிஷம் கொஞ்சம்நீளமா இருக்கு. பாலைவனத்துல வர்ற காட்சிகள் கொஞ்சம் குறைச்சிருக்கலாம். புலி எல்லாம் வராமலே விட்டிருக்கலாம். ஆபிரிக்கால கடத்தி வச்சிருந்து தப்பி வரும்போது மனசு எவ்ளோ பயப்பிடும்ன்னு காட்டுறதுக்காக அந்த காட்சி வச்சிருக்காங்க ஆனா ஏற்கனவே ரொம்ப நேரமா பாலைவனத்துலயே போகும்போது அந்த காட்சியை வச்சிருக்க வேணாம். ஏற்கனவே தனுஷ் பயந்து பயந்து நடிச்சு அசத்தியிருக்கும் போது எக்ஸ்ட்ராவா அது வைக்காம விட்டிருக்கலாம் . இதுலயும் சைக்கோவான்னு திக்கு திக்குன்னு படம் பார்க்க வேண்டி இருந்திச்சு. மத்தபடி ஜெகன், அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சின்னு எல்லாரும் தங்களோட கேரக்டரை நல்லாவே செய்திருக்காங்க. உமா ரியாஸுக்கும் சலீம் குமாருக்கும்தான் நடிப்பை வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பம் கிடைக்கல. அதுலயும் சலீம் குமார் மலையாளத்துல அவ்ளோ பெரிய நடிகரை சரியா யூஸ் பண்ணிக்கல.
ஆனா எல்லாத்தையும் மறந்து படம் முடியும் போது நெஞ்சு முழுக்க மரியானும் பனிமலரும்தான் நிறைஞ்சு போயிருக்காங்க. மரியான் என்னை பொறுத்த வரைக்கும் கடல் ராசாதான்..!!




No comments:

Post a Comment